ما أنزل الله داء إلا أنزل له شفاء
"அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை"
ஸஹீஹுல் புஹாரி - எண் 582
பேரிச்சம்பழம்
♦ விஷம் சூனியத்தில் இருந்து பாதுகாப்பு பெற
عن سعد بن أبي وقاص - رضي الله عنه - قال: سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول: من تصبَّح سبع تمراتٍ عَجْوَة لم يضره ذاك اليوم سمٌّ ولا سِحْر
ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"எவரொருவர் தினமும் காலையில் ஏழு அஜ்வா பேரிச்சம்பழங்களை சாப்பிட்டு வருகிறாரோ அன்றைய இரவு வரை அவரை எந்த விதமான விஷமோ, சூனியமோ பாதிக்காது"
நூல் - ஸஹீஹுல் புஹாரி
♦ பிரசவ வேதனை குறைய (கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்தது)
ஹஸ்ரத் மர்யம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பிரசவ வேதனையால் அவதிப்பட்டபோது அவர்களுக்கு கூறிய மருத்துவ ஆலோசனையை பற்றி அல்லாஹ் அல் குர்ஆனில் கூறும்போது :
وهزي إليك بجذع النخلة} أي وخذي إليك بجذع النخلة، قيل: كانت يابسة قاله ابن عباس، وقيل: مثمرة، والظاهر أنها كانت شجرة، ولكن لم تكن في إبان ثمرها، قاله وهب بن منبه: ولهذا امتن عليها بذلك بأن جعل عندها طعاماً وشراباً فقال: { تساقط عليك رطبا جنيا . فكلي واشربي وقري عينا} أي
طيبي نفساً، ولهذا قال عمرو بن ميمون: ما من شيء خير للنفساء من التمر والرطب
(அப்பழங்களை) நீங்கள் புசித்து (இந்த ஊற்றின் நீரைக்) குடித்து (இக்குழந்தையைக் கண்டு) நீங்கள் (உங்கள்) கண் குளிர்ந்திருங்கள்!"
(அல் குர்ஆன் 19:25,26)
♦ விஷத்திலிருந்து நிவாரணம்
அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"அஜ்வா பேரிச்சம்பழம் சுவர்க்கத்து பழமாகும். அதில் விஷத்திற்கு நோய் நிவாரணம் உண்டு"
நூல் - திர்மிதி
♦ பேரிச்சம் மரத்தின் சிறப்பு
இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"மரங்களில் ஒரு மரம் உண்டு. அது முஸ்லிமைப் போன்று (வளமுள்ளது) ஆகும். அதுதான் பேரீச்ச மரமாகும்."
நூல் - ஸஹீஹுல் புஹாரி எண்
♦ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் உணவு:
அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் வெள்ளரிக்காய்களுடன் (சேர்த்து) பேரீச்ச செங்காய்களை உண்பதை பார்த்திருக்கிறேன்"
நூல் - ஸஹீஹுல் புஹாரி -
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் தர்பூசணி பழத்துடன் சேர்த்து பேரிச்சம் செங்காய்களை உண்டார்கள்"
நூல் - ஷமாயில் திர்மிதி -
அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் முலாம் பழத்துடன் பேரிச்சம் பழங்களை சேர்த்து உண்பதை நான் பார்த்திருக்கிறேன்"
நூல் - ஷமாயில் திர்மிதி -
♦ வறுமை ஏற்படாதிருக்க
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"எந்த குடும்பத்தில் பேரிச்சம்பழங்கள் இல்லையோ (அந்த குடும்பம்) பசியால் வாடும்"
நூல் - அபூதாவூத் -
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"எந்த வீட்டில் பேரிச்சம்பழங்கள் இல்லையோ அந்த வீட்டில் உள்ளோர் பசியால் வாடுவர்"
நூல் - இப்னு மாஜா -
♦ உடல் கொழுக்க
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"என்னை நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக எனது தாயார் என்னை கொழுக்க வைக்க நாடினார்கள். ஆனால் அவர்கள் விரும்பியது எதுவும் பலனளிக்கவில்லை, எதுவரை எனில் வெள்ளரிக்காயை பேரிச்சம்பழத்துடன் சேர்த்து எனக்கு உண்ண தரும் வரையில். அதன் பின்னர் என் உடல் பருமனடைந்தது (என் தாயார் நாடியது போல) "
நூல் - அபூதாவூத் -
♦ நோன்பு திறக்கும்போது சிறந்த ஆரோக்கியமான உணவு
♦ நோன்பு திறக்கும்போது சிறந்த ஆரோக்கியமான உணவு
ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"உங்களில் எவரேனும் நோன்பு திறக்கும்போது, அவர் பேரிச்சம்பழங்களை கொண்டு நோன்பு திறக்கட்டும். பேரிச்சம்பழங்கள் கிடைக்கவில்லையெனில், தண்ணீரை கொண்டு நோன்பு திறக்கட்டும். அது பரிசுத்தமானதாகும்"
நூல் - இப்னு மாஜா -
♦ இதய நோய்க்கு மருந்து
ஸஅத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் சுகவீனமுற்று இருந்தேன். நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் என்னை நோய் விசாரிக்க வந்தார்கள். அன்னவர்கள் தமது கையை என் இரண்டு மார்புகளுக்கு இடையில் வைத்தார்கள். அப்போது நான் அதன் குளிர்ச்சியை என் உள்ளத்தில் உணர்ந்தேன். அன்னவர்கள் கூறினார்கள்: நீ இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாய். தாகிபின் சகோதரர் அல் ஹாரித் இப்னு கலாதாவிடம் செல். அவர் மருத்துவ சிகிச்சை அளிப்பவர். அவர் மதீனாவின் ஏழு அஜ்வா பேரிச்சம்பழங்களை எடுத்து அவற்றை விதைகளோடு சேர்த்து அரைக்கவேண்டும். பின்னர் அதனை உங்கள் வாயினுள் ஊற்றவேண்டும்"
நூல் - அபூதாவூத் -
♦ வாய்வுதொல்லை நீங்க
இன்று எம்மில் பலர் வாய்வு தொல்லையால் அவதியுறுகின்றனர். அவர்கள் அதிகாலையில் பன், பிஸ்கட், ரொட்டி என்று எதுவும் உண்ணாமல் பதினொரு பேரிச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுதொல்லை நீங்கி நல்ல சுகம் பெறலாம்.

No comments:
Post a Comment