Showing posts with label வாட்ஸ்அப் பதிவுகள். Show all posts
Showing posts with label வாட்ஸ்அப் பதிவுகள். Show all posts

Monday, June 26, 2017

பெருநாளும் இன ஐக்கியமும்






பெருநாளும் இன ஐக்கியமும்

(அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்)

இலங்கை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்வதனால் பிற சமூகங்களுடன் நல்லுறவை கட்டியெழுப்பவும் இனமுறுவல்களைத் தவிர்க்கவும் பெருநாள் காலங்களில் பின்வரும் அம்சங்களைக் கருத்திற்கொள்வது வரவேற்கத்தக்கது :-

இனமுறுவல்களைத் தவிர்க்க......


1. ஷவ்வால் பிறை கண்டதும் அல்லது பெருநாள் தினத்தில் பட்டாசு கொழுத்துவதை முற்றாகத் தவிர்ப்பது.

2. முஸ்லிம்கள் தமது வீடுகளிலுள்ள தொலைக்காட்சி மற்றும் வானொலிப் பெட்டிகளது சத்தங்களை அயல் வீட்டாருக்கு தொந்தரவின்றி குறைத்துக் கொள்வது.

3. உறவினர் களது அல்லது நண்பர்களது வீடுகளுக்கு வாகனங்களில் சென்றால் அந்த வாகனங்களை உரிய இடங்களிலும் முறையாகவும் நிறுத்துவது.

4. பெருநாள் சுற்றுலாக்களின் போது மிதமிஞ்சிய கேளிக்கை, ஆடம்பரம், வீண்விரயம் பிறரது ஆத்திரத்தைத் தூண்டும் நடவடிக்கைகளை முற்றாக தவிர்ப்பது

நல்லுறவைக் கட்டியெழுப்ப.....

1. பெருநாள் தினத்திலும் தொடரும் நாட்களிலும் முஸ்லிம் அல்லாதவர்களை வீட்டுகளுக்கு அழைத்து விருந்தளிப்பதும் அன்பளிப்புக்களைப் பரிமாறுவதும்

2. வீடுகளுக்கு அழைப்பதில் சிரமங்கள் இருந்தால் அவர்களது வீடுகளுக்குச் சென்று அவற்றைக் கையளிப்பது.

3. விருந்து பரிமாறும் போதும் அன்பளிப்புக்களை வழங்கும் போதும் இன்முகதோடும் நற்புறவோடும் உரையாடும் அதேவேளை மார்க்கத்துக்கு முறணான வார்த்தைப் பிரயோகங்களையும் செயல்களையும் தவிர்ப்பது.

4. பிரதேச மத குருக்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள்,கிராம சேவையாளர்கள் போன்றவர்களுக்கு முஸ்லிம் ஊர்களில் விஷேட பெருநாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து சிற்றுரைகளை நிகழ்த்துவதும் அங்கு இனிப்புப் பண்டங்களப் பகிர்வதும்

5. முஸ்லிம் உத்தியோகத்தர்கள்,அதிகாரிகள் பெருநாள் முடிந்து தத்தமது காரியாலயங்களுக்கு வேலைக்குத் திரும்பும் போது பெரு நாள்(அவுருது)என்ற பெயரில் இனிப்பு மற்றும் உணவுப் பண்டங்களைப் பகிர்வது

6. சைக்கிளோட்டம், கால்பந்து, கிரிகட், கரப்பந்து,எல்லே போன்ற கூட்டான விளையாட்டுப் போட்டிகளை பிற சமயத்தவர்களோடு இணைந்து ஒழுங்கு செய்யலாம்.இந்த நிகழ்வுகளின் போது ஆண்-பெண் கலப்பு போன்ற மார்க்கத்துக்கு முரணான கார்யங்கள் இடம்பெறாத வண்ணம் இஸ்லாமிய வரம்புகளைப் பேணிக்கொள்வது அவசியமாகும்.

இவை சிறுபான்மை முஸ்லிம் சமூக அமைப்பில் பெருநாட்களின் ஊடாக சகவாழ்வை அடைந்து கொள்ள கடைப்பிடிக்க முடியுமான ஒழுங்குகளாகும்.

எமக்குள் நாம்…

1. தாய் தகப்பன் உறவுகளைப் புத்துப்பித்து பலப்படுத்துவோம்!

2. இனபந்துக்களது வீடுகளுக்குச் சென்று குசலம் விசாரிப்போம்!

3. அயல் வீட்டாருக்கு அன்பளிப்பு பரிமாறுவோம்!

4. ஊரிலும் அயல் ஊர்களிலும் உள்ள அனாதைகள்,ஏழைகள், விதவைகள்,பண வசதியற்ற நோயாளிகள்,அங்கவீனர்கள்,இயற்கை அனர்த்தங்களாலும் 30 வருட யுத்த்ததால் பாதிக்கப்பட்டு இன்னும் நிர்க்கதியான நிலையில் இருப்பவர்கள் போன்றோருக்கு அன்பையும் பணத்தையும் பொருட்களையும் கொடுத்து உதவி செய்து அல்லாஹ்வின் அருளையும் நன்மைகளையும் பெற்றுக் கொள்வோமாக!

5. சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் உம்மத்தின் விமோசனத்துக்காக வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்!

6.எமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான தொடர்பை பாவங்களை தவிர்ப்பதன் மூலமும் நல்லமல்களில் சம்பந்தப்படுவதன் மூலமும் பலப்படுத்திக் கொள்வோம்.!

யா அல்லாஹ் எம் அனைவரையும் பொருந்திக் கொள்வாயாக!

Friday, March 24, 2017

இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை


 இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை






 பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள்.

1 . அன்னை கதிஜா (ரலி)
2 . அன்னை சவுதா (ரலி)
3 . அன்னை ஆயிஷா (ரலி)
4 . அன்னை ஹப்ஸா (ரலி)
5 . அன்னை ஜைனப் (ரலி)
6 .அன்னை உம்மு சல்மா (ரலி)
7 . அன்னை ஜவாரிய்யா பின் ஹரித் (ரலி)
8 . அன்னை ஜைனப் பின் ஹஜாஷ் (ரலி)
9 . அன்னை ஹபீபா (ரலி)
10 . அன்னை சபியா (ரலி)
11 .அன்னை மைமூனா (ரலி)

   பெருமானார் (ஸல்) அவர்களின் குழந்தைகள்.
   பெண் மக்கள் 4

1 . ஜைனப் (ரலி)
2 . ருகையா (ரலி)
3 . .:பாத்திமா (ரலி)
4 . உம்மு குல்தூம் (ரலி).

  ஆண் மக்கள்.3

1 . காஸிம்(ரலி)
2 . அப்துல்லாஹ் (ரலி)
3 . இப்ராஹீம் (ரலி).

   நீதி நபி (ஸல்) அவர்களின்
   நிர்வாகஸ்தர்கள்.

1 அப்துர் ரஹ்மான் இப்னு அவ்.:ப்
   (ரலி)
2 . பிலால் (ரலி)
3 . அஸத் இப்னு உஸைத் (ரலி)
4 . முஐகீப் (ரலி).

    கவிஞர்கள்.

1 . ஹஸ்ஸான் இப்னு ஸாபித்( ரலி)
2 .அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி)
3 . க.:ப் இப்னு மாலிக் (ரலி).

    முஅத்தினாக நியமனம் செய்யப்பட்டநான்கு பேர்கள்.

1 . பிலால் (ரலி)
2 .அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி)
3 . ஸ.:துல்கர்ள் (ரலி)
4 . அபூ மஹ்தூரா (ரலி).

     பணியாளர்கள் ஆண்கள்.

1 . அனஸ் இப்னு மாலிக் (ரலி)
2 . அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
3 . உக்த் இப்னு ஆமிர் (ரலி)
4 . அஸ்க.: இப்னு ஷரீக் (ரலி).

   பெருமானார் (ஸல்)அவர்களின்
   குதிரைகள் ,ஒட்டகங்கள்.

1 . ஸக்ப்
2 . முர்தஜிஸ்
1 . கஸ்வா
3  .லஹீ.:ப்
2 . ஜத்ஆ.:
4  .லிஜாஜ்
3 . ஆழ்பா.:
5 . ளரி.:ப்
6 . வர்த்
7 . ஸப்ஹா
8 . ய.:சூப்

     ஈகை நபி(ஸல்) அவர்களின் ஈட்டிகள்

1 . பைளா.
1 . முஸ்னா.
2 . ரவ்ஹா.
2 . முஸ்வீ
3 . ஸ.:ப்ரா
4 . ஜவ்ரா.
5 . சதாத்.

  இஸ்லாமிய போரும் 
  பிறையும்  ஹிஜ்ரியும்.


1 . பத்ரு போர் ரமலான் 01
2 . உஹது போர் ஷவ்வால் 03
3 . சவீக்சண்டை ஷவ்வால் 03
4 . பனு முஸ்தலிக் போர் ஷ.:பான் 05
5 . அஹழ் போர் ஷ.:பான் 05
6 . கைபர் போர் ஷ.:பான் 07
7 . மூத்தாப் போர் ஷ.:பான் 07
8 . மக்கா வெற்றி ஷவ்வால் 08
9 . ஹூனைன் போர் ஷவ்வால் 09
10 . தபூக் போர் ரஜப் 09
11 . தாயிப் போர்.

 நபிமார்களும் அருளப்பட்ட வேதமும் 
 


மூஸா (அலை)
தவ்ராத் இப்ரானி

தாவூத் (அலை)
ஸபூர் யூனானி.

ஈஸா (அலை)
இன்ஜீல் ஸூர்யானி.

முஹம்மது (ஸல்)
குர்ஆன் அரபி.

 கஃபா கட்டுவதற்கு கல்
 எடுக்கப்பட்ட மலைகள்.


1 . ஜபலே தூர்ஸீனா
2 . ஜபலே தூர்ஜீனா
3 . ஜபலே தூர்லப்னான்
4 . ஜபலே தூர்ஜூத்
5 . ஜபலே ஹிரா.




 நபிமார்கள் மொத்தம் - 1 24 000 மேற்பட்டவர்கள் .
 ரஸூல்மார்கள் -313 பேர்.


குர்ஆனில் சொல்லப்பட்ட
நபிமார்கள் 25 பேர்.313 பேரில் உலுல் அஜ்ம் -5 பேர்.


1 . நூஹ் (அலை)
2 . இப்ராஹீம் (அலை)
3 . மூஸா (அலை)
4 . ஈஸா (அலை)
5 . முஹம்மது ரஸூல் (ஸல்).

Monday, March 20, 2017

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் ஆண்களின் தாடி BBC யின் மருத்துவ ஆய்வறிக்கை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் ஆண்களின் தாடி
BBC யின் மருத்துவ ஆய்வறிக்கை
.................












===========================================================
ஆண்கள் தாடி வளர்ப்பது சுகாதாரமா, சுகாதாரகேடா என்ற வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், இது தொடர்பாக இதன் சரியான விளக்கத்தை பெறுவதற்காக தொற்று நோயியல் நிபுணரான டாக்டர் கிரீஸ் வான் டுலேகன் (Dr Chris Van Tulleken) தனது ஆராச்சியை இலண்டண் நகர வீதிகளிலிருந்து ஆரம்பித்தார்.
பல்வேறுபட்ட தாடிவைத்த, தாடிவைக்காத ஆண்களின் தாடைப் பகுதியிலிருந்து சிறிய மாதிரிகளை (Sample) எடுத்து அவற்றை University of Central London ஐ சேர்ந்த நுண் உயிரியல் ஆராச்சியாளரான டாக்டர் ஆடம் ரொபார்ட்ஸிடம் (Dr Adam Roberts) மேலதிக ஆராய்சிக்காக கொடுத்தார்.
இந்த மாதிரிகளில் இருந்து நுண்ணுயிர்கள் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டன. இருபது வகையான தாடிகளில் இருந்து நூறு வகையான நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவை சாதாரணமாக மனித தோலில் காணப்படுபவையென்றும், அதில் ஒருவகை நுண்ணுயிர் மனித உடலில் உள்ளுறுப்புகளில் கணாப்படுவதெனவும் மேலதிக ஆராய்ச்சியில் அறியப்பட்டது.
பாதகமான விளைவுகள் எதனையும் மனிதர்களுக்கு உண்டாக்கக்கூடிய நுண்ணுயிர்கள் எதுவும் காணப்படாததால், தாடி வைப்பது உடல் நலத்திற்கு கேடானது என்ற கருத்து தவறானது என்று கண்டறிந்தார்கள்.
டாக்டர் ஆடமின் அடுத்த நிலை ஆராய்ச்சிதான் ஆச்சரியமான முடிவை காட்டியது.......... .....
இந்த நுண்ணுயிர்களின் நோய் எதிர்ப்புத்தன்மை (Antibiotic)எவ்வாறு இருக்கிறதென்று ஆராய்ந்தபொழுது, தாடி வைத்தவர்களில் காணப்பட்ட நுண்ணுயிர்கள், நோய் எதிர்ப்புத்தன்மையை(Antibiotic ) உருவாக்கக்கூடிய சில இரசாயண பதார்த்தங்களை வெளியிட்டு, இப்பதார்த்தம் மற்றைய நுண்ணுயிர்களை கொன்று இவை தங்களை காப்பாற்றி கொள்கின்றது.
இந்த இரசாயண பதார்த்தத்தின் தன்மை நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் அன்டிபயோடிக்ஸை நூறுசத விகிதம் ஒத்துள்ளது.
எனவே தாடி வைத்திருப்பவர்களின் முகம், இயற்கையாகவே
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடிய நுண்ணுயிர்களை கொண்டுள்ளது என்று இவ் ஆராச்சியின் முடிவு தெரிவிக்கிறது.
..........................
தாடியை பற்றிய மற்றுமோர் ஆய்வில்:---
இலண்டனில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் 408 (தாடிவைத்த, தாடி வைக்காத)ஆண்களிடையே அவர்களது தாடைப்பகுதியில் உள்ள நுண்ணுயிர்கள்பற்றி ஆராயப்பட்டபொழுது, தாடி வைத்தவர்களின் முகத்திலுள்ள நுண்ணுயிர்களின் பரம்பல், தாடி வைக்காதவர்களைவிட மிக குறைவாக இருந்ததையும், தாடி வைத்தவர்களின் முகத்திலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி(Antibiotic), தாடி வைக்காதவர்களிலும் பார்க்க கூடுதலாக இருந்ததும் அவதானிக்கப்பட்டது.
இந்த இரண்டு ஆராய்ச்சிகளிலும், ஆண்கள் தாடி வளர்ப்பது அவர்களது முகத்திற்கு பாதுகாப்பையும், உடம்பிற்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிப்பதாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
References:
Dr. Adam Roberts (iris.ucl.ac.uk)
sciencedirect . com
..................................................
"இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். "
புஹாரி ஹதீஸ் (5893).

Wednesday, March 15, 2017

தர்மம் செய்வோம்


சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை




இந்த சம்பவம் ஒரு சவூதி இளைஞனுடையது. வாழ்க்கையில் அவனுக்கு நிம்மதி இல்லை. அவனது சம்பளம் வெறும் நான்காயிரம் ரியால் மட்டுமே! கல்யாணமானவனாக இருந்ததால் வீட்டுச் செலவு சம்பளத்தை விட அதிகமாகவே இருந்தது.

மாத முடியும் முன்பே சம்பளம் முழுவதும் செலவாகி கடன் வாங்கும் நிலையில் இருப்பான்.

இப்படியே கடன் வாங்கி, வாங்கி கடன் என்னும் புதைமணலில் சிக்கித் தவித்தான். அவன் தனது வாழ்க்கை இப்படியாகத் தான் செல்லும் என முடிவுச் செய்து விட்டான்.

அவனது மனைவியும் தங்களது பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டிருந்தும் கடன் சுமையால் மூச்சு திணறிக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அவன் தனது நண்பர்களிடத்தில் இருக்கும் போது ஆலோசனை கூறத்தக்க நண்பரும் இருந்தார். இந்த நண்பரின் ஆலோசனைகளுக்கு மரியாதை கொடுப்பான்.

பேச்சுவாக்கில் தனது பொருளாதாரக் கஷ்டத்தை தெரிவித்தான். கதையைக் கேட்டு சம்பளப் பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையினை சதகாவாக கொடுக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளும்படி ஆலோசனை வழங்கினார்.

சவூதி இளைஞன் வியப்பும் திகைப்பும் மேலிட "ஐயா, வீட்டுச் செலவிற்கே சம்பளப் பணம் பற்றாமல் கடன் வாங்க வேண்டிய நிலையில் இருக்க சதாகா கொடுப்பதற்கு யோசனை கூறுகிறீர்களே?" என வினவினான்.

பிறகு வீட்டிற்கு வந்து மனைவியிடம் அவரது ஆலோசனையைப் பற்றி கூற, அவளோ இதனையும் பரீட்ச்சித்து பார்க்கலாமே? இறைவன் ரிஜ்க்கின் கதவினை திறந்துவிட வாய்ப்பு ஏற்படும் என்றாள்.

மாதா மாதம் 4 ஆயிரம் ரியாலிலிருந்து 30 ரியால் சதகாவக வழங்க உறுதிபூண்டு மாதக் கடைசியில் சதகா வழங்க ஆரம்பித்தான்.

சுப்ஹானல்லாஹ்!

அவனது நிலைமையே மாறிவிட்டது என்பதனை சத்தியமிட்டு கூறுகிறேன்.

எப்போதும் பொருளாதார நெருக்கடியும் கவலையும் எங்கே? தற்போதைய நிம்மதியான நிலைமை எங்கே? சின்னஞ்சிறு பொறுத்துக் கொள்ளக்கூடிய கடன் சுமையைத் தவிர. விடுதலை கிடைத்த நிம்மதியோடு வாழ்க்கையும் பூங்காவனமாக உணர்ந்தான்.

சில மாதங்களுக்குப் பின் தனது குடும்ப வாழ்க்கையை முறைபடுத்தி, சம்பளப் பணத்தினை வகைப்படுத்தி முறையாக செலவு செய்ய, இதில் முன் எப்போதும் கிடைக்காத பரக்கத் கிடைக்கத் தொடங்கியது!ا

இந்த வருமானத்தில் நான் எனது கடன் சுமையிலிருந்து வெகு விரைவில் மீண்டுவிடுவேன் என தெரிந்துக் கொண்டான்.

அல்லாஹுத்தாலா எனது வருமானத்திற்கான மற்றொரு கதவை திறக்கச் செய்தான்

இறைவன் மீது சத்தியமாக சதகாவின் பலன் என்னவென்பதை யாரும் அறியமாட்டார்கள், அதனை செயல்படுத்தி பார்த்தவர்களைத் தவிர!

சதகா செய்யுங்கள், ஸபர் என்னும் பொறுமையை கடைபிடியுங்கள், அல்லாஹ்வின் கிருபையும் அருளும் மழையாக பொழிவதை கண்கூடாக பார்ப்பீர்கள்!

குறிப்பு:

1. நீங்கள் முஸ்லீம் ஒருவருக்கு சதகா செய்ய ஆலோசனை கொடுத்து அதனை அவர் செயற்படுத்தினால் சதகா செய்வதால் அவருக்கு கிடைக்கும் புண்ணியமே ஆலோசனை கூறியவருக்கும் கிடைக்கும். அதனால் சதகா செய்தவரின் புண்ணியம் குறையாது.

யோசியுங்கள்!!!

நீங்கள் இவ்வுலகை விட்டு சென்றுவிட்டாலும் உங்கள் ஆலோசனையை செயல்படுத்தி சதகா கொடுப்பவர்கள் இருந்துக் கொண்டிருப்பார்கள். இதனால் உங்களுக்கு புண்ணியம் கிடைத்துக் கொண்டேயிருக்கும்!

2. இதே போல் நீங்களும் இச்செய்தியினை பரப்பச் செய்து அதனால் யாரேனும் சதகா செய்வதை பழக்கமாக்கிக் கொண்டால் உங்களுக்கும் சதகா செய்பவருக்கு கிடைக்கும் அளவு புண்ணியம் கிடைக்கும்.

நண்பரே!

நீங்கள் மாணவராக இருப்பின் உங்களுக்கு கிடைக்கும் அரசு ஊக்கத்தொகையாகவோ கைச்செலவுத்தொகையாகவோ இருந்தாலும் அதிலும் சிறு தொகையினை சதகா கொடுக்கச் செய்யுங்கள்.ر

சதகா பெறுபவரின் கையை அடைவதற்கு முன் அல்லாஹ்வின் கையை அடைந்தால் நிச்சயமாக பெறுபவருக்கு கிடைக்கும் சந்தோஷத்தைவிட கொடுப்பவருக்கு கிடைக்கும் சந்தோஷம் அதிகமாக இருக்கும்.

என்ன தாங்கள் சதகாவின் பலன்களை அறிவீர்களா?

முக்கியமாக 17,18,19 எண் விஷயங்களை கவனமாக படியுங்கள்.

சதகா கொடுப்பவர்களும், அதற்கு காரணமாக இருப்பவர்களும் கேளுங்கள்:

1. சதகா சுவர்க்க வாயில்களில் ஒன்றாகும்.

2. சதகா நற்செயல்களில் முக்கியமானதாகும். அன்னதானம் அவற்றிலும் முக்கியமானது.

3. சதகா கியாமத்து நாளில் நிழல் கொடுக்கும். சதகா கொடுப்பவர்களுக்கு நரக நெருப்பிலிருந்து காக்கும்.

4. சதகா இறை கோபத்தை தணிக்கும், கப்ரு வெப்பத்தை தணிக்க உதவிடும்.

5. சதகா மய்யத்திற்கு சிறந்த அன்பளிப்பும், லாபகரமானதும் ஆகும். அல்லாஹ் இதற்கான புண்ணியத்தை அதிகரித்துக் கொண்டேயிருப்பான்.

6. சதகா அழுக்கு நீக்கியாகும். மனதை சுத்தப்படுத்துவதால் புண்ணியம் அதிகரிக்கும்.

7. சதகா, அதை செய்பவர்களின் முகத்திற்கு கியாமத்து நாளில் பிரகாசத்தையும் தேஜஸையும் கொடுக்கும்.

8. சதகா கியாமத் நாளின் பயங்கரத்திலிருந்து காப்பாற்றும், நடந்தவைகளைப் பற்றி பச்சாதாபப்படச் செய்யாது.

9. சதகா பாவ மன்னிப்பாகவும், தவறுகளுக்கு பரிகாரமாகவும் இருக்கிறது.

10. சதகா நல்முடிவிற்கு சுபச்செய்தியாகவும், மலக்குகள் துவாவிற்கு காரணமாக இருக்கிறது.

11. சதகா கொடுப்பவர் சிறந்த மனிதர்களில் சேர்ந்தவராவார், இதற்கு காரணமானவர்களுக்கும் புண்ணியம் சேரும்.

12. சதகா கொடுப்பவருக்கு பெரிய வெகுமதிக்கு வாக்குறுதியாகும்.

13. மற்றவர்களுக்காக செலவழிப்பவர் இறையச்சமுள்ளவர்களின் வரிசையில் சேர்க்கப்படுவார், சதகா கொடுப்பவரை இறைவனின் படைப்புகள் விரும்பும்.

14. சதகா கொடுப்பது கருணை உள்ளத்திற்கும் வள்ளல் தன்மைக்கும் அடையாளமாகும்.

15. சதகா துவா ஏற்கப்படுவதற்கவும் கஷ்டங்களிலிருந்து விடுபடுவதற்கான வழியாகும்.

16. சதகா முஸீபத் மற்றும் கஷ்டங்களை விலக்குகிறது. உலகில் தவறுகளின் 70 கதவுகள் அடைக்கப்படுகின்றன.

17. சதகா ஆயுள் மற்றும் சொத்துக்கள் அதிகரிப்பிற்கும் காரணமாகும். ரிஜ்கும் வெற்றியும் கிடைக்கச் செய்யும்.

18. சதகா மருத்துவமும், மருந்தும், ஷஃபாவுமாகும்.

19. சதகா நெருப்பில் எரிவதிலிருந்தும், நீரில் மூழ்கி விடுவதிலிருந்தும், திருட்டு மற்றும் துர்மரணத்திலிருந்தும் தடுக்கும்.

20. சதகா விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு செய்தாலும் கூட புண்ணியம் கிடைக்கும்.

கடைசி வார்த்தை:

சதகாவின் நிய்யத்தில் இத்தகவலை பரப்புவது மிகச்சிறந்த சதகாவாகும்.

Tuesday, March 14, 2017

இணையதளத்தில் அன்றாடம் நாம் உபயோகிக்கும் சில வார்த்தைகள்

المصطلحات المستعملة في الوسائل الاجتماعية:



Account = حساب
Like = إعجاب
Comment = تعليق
Post = منشور
Share = مشاركة
Message = رسالة
Page = صفحة
Group = مجموعة
Profile = صفحة شخصية
Block = حظر
Hashtag = وسم
Poke = نكز
Notification = إشعار
Link = رابط
Icon = مناسبة
Add = إضافة
Mention/Tag = إشارة
Status = حالة
Wall = حائط
Cover = غلاف
Profile Picture = صورة شخصية
Time Line  = يوميات
Note = ملاحظة
Chat = دردشة
Tweet = تغريد
Channel = قناة
Setting = إعدادات
Friends = أصدقاء
Following = متابعة
Followers = متابعون
Subscribe = اشتراك
Pasword = كلمة السرية /كلمة المرور
Cancel = إلغاء
Next = التالي
Ok = موافق

 سنن الصيام✍️🌷     -يسن للصائم أن يتسحر؛ لأن في السحور بركة، ونعم سحور المؤمن التمر، ويسن تأخيره، ومن بركة السحور التقوي على طاعة الله وعبا...